புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 34 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. வடமாநிலத்திலிருந்து வரும் 6 ரயில்களின் பயண நேர மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என டெல்லி வடக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.


அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 7 சர்வதேச விமானங்கள் (6 வருகையை, புறப்படும் 1) மற்றும் 6 (2 வருகையை, 4 புறப்படும்) உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில் புறப்பட தாமதமானது. 


உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மற்றும் இடாவாஹ பகுதியில் இன்று கடும் பனிமூட்டம் காணப்பட்டது.


மிக அடர்த்தியான பனி பீகார், உத்தரப் பிரதேசம், மற்றும் வடக்கு மத்திய பிரதேச பகுதிகளில் காணப்பட்டதாக தகவல் வந்துள்ளது.


அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இந்நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும். இன்னும் சில நாட்கள் பனி மூட்டம் மற்றும் குளிர் காற்று அதிக அளவு காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.