ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ரிசர்வ் பொறியியல் படை ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமில் தொழிலாளர்களாக பொதுமக்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த முகாமில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர்


இதனையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.