ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் கங்காதர், தனது மகனை தனது பணியிடத்திற்கு அழைத்துச் சென்றபோது, தனியாக சுற்றித் திரிந்த சிறுவனை நாய்கள் தாக்கின. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். சிசிடிவியில் பதிவான வீடியோவில் சிறுவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மூன்று நாய்கள் ஓடி வந்து அவனை தாக்கியது மனதை பதற வைப்பதாக உள்ளது.


தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் சம்பவம் குறித்து கூறுகையில், “எங்கள் நகராட்சிகளில் தெரு நாய்களின் தொல்லையை சமாளிக்க முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் விலங்கு பராமரிப்பு மையங்கள், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்கியுள்ளோம். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க எங்களால் முடிந்ததைச் செய்வதை உறுதி செய்வோம்” என்று கூறினார்.


மனம் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்:



மாநிலங்கள் முழுவதும் பதிவாகியுள்ள நாய் தாக்குதல் சம்பவங்களில் இது சமீபத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஏழு வயது சிறுவன் தெரு நாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் போன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. உத்திர பிரதேசத்தின் பிலாஸ்பூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் கன்ஹா என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய்கள் அவனைத் தாக்கின. சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள், தெருநாய்கள் கன்ஹாவைக் கடித்துக்கொண்டே இருந்ததாகவும், கிராம மக்கள் அவரைக் காப்பாற்றும் நேரத்தில், சிறுவனுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது என்றும் கூறினார். உள்ளூர்வாசிகள் நாய்களை விரட்டி, சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.


மேலும் படிக்க | CCTV Video : சிறுமியை கொடூரமாக தாக்கும் தெருநாய்... நேரில் பார்த்த தாய் அதிர்ச்சி


இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நாய் தாக்குதலில் இருந்து தப்பிக்க கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் ஏற்பட்ட காயங்களால் ஸ்விக்கி டெலிவரி பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.


கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள குடியிருப்பில் ஏழு மாத குழந்தை தெருநாய் தாக்கி கொல்லப்பட்டது. கூலி வேலை செய்யும் குழந்தையின் பெற்றோர், நொய்டாவில் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு நாய்கள் சிறுவனைத் தாக்கின.


மேலும் படிக்க | ஐபோன் ஆசை... ரூ. 46 ஆயிரம் பணம் இல்லை... இதற்காக கொடூர கொலையா - அதிர்ச்சி சம்பவம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ