சையது அலி ஷா கிலானிக்கு உடல் நலக்குறைவு
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
உடல்நிலை சீராக இருப்பதாகவும் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் சோதனை முடிந்த பின்னர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
திக்ரிக் இ ஹூரியத் கட்சியின் தலைவர் கிலானி தேசவிரோத குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்பட்டுள்ளது.