ஐதராபாத்: ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து நேரிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் நனகராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 


நேற்று இரவு 4 சடலங்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்து உள்ளது. 


இதற்கிடையே விபத்து சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.