கடந்த 24-ம் தேதி கோவையில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். குறித்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற சால்வை ஒன்றினை ஜக்கி வாசுதேவ் அவருக்கு அளித்திருந்தார்.


விழா முழுவதும் பிரதமர் மோடி அந்த சால்வையை அணிந்திருந்தார். அந்த சால்வையை தனக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், டிவிட்டர் மூலம் டெல்லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற ஆதரவாளர் ஒருவர் கேட்டிருந்தார்.


இதையறிந்த பிரதமர் மோடி, சால்வையுடன் தனது கையெழுத்திட்ட கடிதத்தினையும் ஷில்பி திவாரிக்கு அனுப்பியுள்ளார். 


இந்நிலையில் பிரதமர் அனுப்பிய சால்வை மற்றும் கடிதத்தின் புகைப்படங்களை ஷில்பி திவாரி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.