விவாகரத்தான மனைவியை துன்புறுத்தி பிறப்புறுப்பில் சூடுபோட்ட முன்னாள் கணவன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் ஹிபத்பூர் நகரை சேந்த 30 வயதுடைய கமலேஷ் என்பவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளுக்கு விவாகரத்து செய்துள்ளனர். இதையடுத்து, தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  


இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தனது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு சென்ற கமலேஷ், அவரிடம் வேறு யாரையாவது காதலிக்கிறாயா? யார் அவன்? என கேட்டு துன்புருத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி அவர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளாலும் திட்டி அடித்துள்ளார். 


இதையடுத்து, நிலைகுலைந்து போன அந்த பெண் கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து கமலேஷ் அந்த பெண்ணின் உடைகளை கழட்டி அவரது தொடை மற்றும் பெண்ணுறுப்பு பகுதியில் அயன் பாக்ஸால் சூடு வைத்துள்ளார். இது குறித்து கமலேஷின் முன்னாள் மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கமலேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.