இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் COVID-19 வழக்குகளில் உச்சம் காணப்படும் என AIIMS இயக்குனர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய்த்தொற்றின் விளைவை மட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயை இந்தியா எதிர்த்துப் போராடுகையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) இயக்குனர் ரன்தீப் குலேரியா, நாட்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் COVID-19 வழக்குகளில் உச்சம் காணப்படும் என எச்சரித்துள்ளார்.


வரும் மாதங்களில் நேர்மறையான வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என்று குலேரியா குறிப்பிட்டுள்ளார். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து அல்லது நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


COVID-19 தனிமைப்படுத்தல் மையம் மற்றும் சோதனை மையங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஹாட்ஸ்பாட் பகுதிகள் அல்லது மண்டலங்களில் கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்பட வேண்டும் என்று குலேரியா அறிவுறுத்தினார்.


கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு உதவ மக்கள் சமூக விலகல், சானிடிசர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற அடிப்படை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் நீண்ட காலமாக தொடரும் என குறிப்பிட்ட அவர், இந்த வழியில், ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலும் ஒரு மாற்றம் இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதனிடையே மத்திய சுகாதார அமைசர் ஹர்ஷ் வர்தன் ஒரு கூட்டத்தில் தெரிவிக்கையில்., “நாட்டில் சோதனை திறன் அதிகரித்துள்ளது, 327 அரசு ஆய்வகங்கள் மற்றும் 118 தனியார் ஆய்வகங்களுடன் ஒரு நாளைக்கு 95,000 சோதனைகள் நடைப்பெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக, COVID-19 க்கு இதுவரை 13,57,442 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மே 7 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டிலிருந்து மொத்தம் 52,952 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 15,266 பேர் குணமடைந்துள்ளனர், 1,783 இறப்புகள் நிகழ்ந்துள்ளன என குறிப்பிட்டார்.


கடந்த 24 மணி நேரத்தில், 3561 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் 1084 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இறப்பு விகிதம் 3.3 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 28.83 சதவீதமாகவும் இருப்பதால் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். ICU-வில் 4.8 சதவீத நோயாளிகளும், வென்டிலேட்டர்களில் 1.1 சதவீதமும், செயலில் உள்ள நிகழ்வுகளின் ஆக்ஸிஜன் ஆதரவில் 3.3 சதவீத நோயாளிகளும் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.