இந்தியாவின் வளர்ச்சியை ‌‌8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். 


பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், முதலீடு, வர்த்தகம் மேற்கொள்ள‌ சிறந்த இடமாக திகழ்வதாகவும‌ பிரதமர் கூறினார். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வர்த்தகம், உற்பத்தி, கண்டுபிடிப்பு, உலக நாடுகளின் முதலீடு ஆகியவற்றைப் பெறுவதற்கேற்ப கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 


2022-ம் ஆண்டிற்‌குள் 50 கோடி வேலைவாய்ப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த மோடி, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களி‌ன் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.