கோல்கட்டா : மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்னா என்ற இடத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் 4 பேருடன் சென்ற சீட்டா ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.


விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய அதிகாரியை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


இதையடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இதுகுறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.