கர்நாடக முன்னாள் முதல்வரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை 8.45 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. சித்தார்த் மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 


கடந்த சில மாதங்கங்களுக்கு முன் கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. 


தற்போது கர்நாடக முன்னாள் முதல்வரின் மருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.