ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI அறிக்கையின்படி, புல்வாமாவிலுள்ள லிட்டர் கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.


வசிம் ஷா மற்றும் ஹபிஸ் நிசார் என்ற இரு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


பயங்கரவாதிகள் வசிம் ஷா மற்றும் ஹபிஸ் நிசார் இருவரும் லஷ்கர்-இ-தொய்பாவின் உறுப்பினர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



எனினும், இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினருக்கு ஆபாத்துக்கள் ஏதும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.