கடந்த 18 மணிநேரமாக குப்வாரா மாவட்டத்தின் பாபாவுண்ட் கிராமத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்ணடையில் CRPF 92 வது பட்டாலியனை சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதே 92 வது படைப்பிரிவில் மற்ற மூன்று வீரர்களுக்கு குண்டடி பட்டு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மூன்று வீரர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இன்று நடைபெற்ற பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் இறந்துள்ளனர். எட்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.