ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் தொடர் பனிப்பொழிவு நிலவி வருகிறது.


சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. 


இந்நிலையில் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் தொடர் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவு காரணமாக அரையிருளாகக் காணப்படுவதால் வாகனங்கள் விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.