ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.


இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. வாக்கு எண்ணிக்கையில்  துவக்கத்தில் ஆளும் பாஜக பின்தங்கியது. தற்போது இந்த எண்ணிக்கையில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 


 



 


 


காலை 9 மணிக்கு பிறகு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பாஜக 37  தொகுதிகளிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.


கடந்த தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த  ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்தது.


இந்நிலையில் தற்போதைய நிலவரம் படி பாஜக கட்சி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது மேலும்  7 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.