காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் போலீஸார் இருவர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர்.  அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த சண்டையில் சத்ரிபோரா சோபியான் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.


இந்த என்கவுன்ட்டரின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஒரு ரைபிள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் 5, ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டுகள் 11, ஒரு கையெறி குண்டு ஆகியன கைப்பற்றப்பட்டன.