டெல்லி: ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக, இந்தியா கேட் முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பயோடெக்னாலஜி பிரிவில் பயின்று வந்த மாணவர் நஜீப் அகமது கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்தின் நுழைவு வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிரிந்தார்கள். 


இது தொடர்பாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் நாங்கள் பேசியிருக்கிறோம் என்றும் காணாமல் போன மாணவர் நஜீபை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியிருந்தார்.