பீகார்: பீகார் மாநிலத்தில் வெளியாகிவரும் இந்தி நாளிதழில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றிவரும் தர்மேந்திரா சிங் என்பவரை ரோட்டாஸ் மாவட்டத்தில் வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை தர்மேந்திரா சிங் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மூன்று மர்மநபர்கள் அவரை துப்பாக்கிகளால் சுட்டனர்.


குண்டுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் விழுந்த அவரை அப்பகுதிவாசிகள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே தர்மேந்திரா சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக ரோட்டாஸ் மாவட்ட போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.