காங்கிரஸ் தலைவர் திக்விஜயா சிங் புதன்கிழமை (மார்ச் 11) ஜோதிராதித்யா சிந்தியா கட்சியை ஓரங்கட்டியதால் கட்சியில் இருந்து விலகினார் என்ற கூற்றை நிராகரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15 மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிந்தியா "ஓரங்கட்டப்படவில்லை" என்றும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் சம்பல் பிரிவில் எந்த முடிவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்படவில்லை என்றும் சிங் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "அவர் ஓரங்கட்டப்பட்டார் என்பது தொடர்பாக எந்த கேள்வியும் இல்லை. உண்மையில், குவாலியர் சம்பல் பிரிவைச் சேர்ந்த எம்.பி.யின் கண் அசைவு இல்லாயம் எந்தொரு முடிவும் எடுக்கப்படுவதில்லை.  கடந்த 16 மாதங்களில் அவரது அனுமதியின்றி இந்த பகுதியில் எதுவும் நகரவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வருத்தமாக இருக்கிறது, ஆனால் மோடிஷா டுடேலேஜின் கீழ் அவர் நன்றாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.



செவ்வாய்க்கிழமை சிந்தியா மற்றும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய பின்னர் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் சிங்கின் கருத்து வெளிவந்துள்ளது.


"மோடிஷா அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அவர் காண்கிறார், நமது வங்கிகள் சரிந்து கொண்டிருக்கும் போதும், நமது ரூபாய் வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும், நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும், நமது சமூக துணி அழிக்கப்பட்டு விரும் நிலையிலும், இந்த ஆட்சி நாட்டு மக்களுக்கான ஆட்சி என்று அவர் கருதுகின்றார், இருக்கட்டும்" என்று சிங் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


"அக்கட்சியில் அவர் அமித் ஷா அல்லது நிர்மலா சீதாராமனுக்கு மாற்றாய் மாற வேண்டும். அவருடைய திறமையை குறித்து பேசினால் அவர் நிச்சயமாக ஒரு சிறந்த பணிக்காரர். அவர் மோடிஷா டுடேலேஜின் கீழ் வளரட்டும். மகாராஜாக்கு எங்கள் வாழ்த்துக்கள்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


செவ்வாயன்று, சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறி சில நிமிடங்களில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். தனது பங்கிற்கு, முதல்வர் கமல்நாத் செவ்வாயன்று நம்பிக்கையுடன் தோன்றினார், கட்சி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பதால் அவரது அரசாங்கம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை.


மத்திய பிரதேச சட்டசபையில் 230 உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் இரண்டு எம்.எல்.ஏக்களின் மறைவால் தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. ஆக மத்திய பிரதேச சட்டசபையின் பயனுள்ள வலிமை இப்போது 228 ஆகவும், அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான மேஜிக் எண் 115 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.