கதகளி புகழ் மடவூர் வாசுதேவன் நாயர் அவர்கள், நிகழ்ச்சி ஒன்றில் கதகளி ஆடுகையில் மேடையில் விழுந்து உயிர்இழந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை இரவு அன்கஸ்தியோடு மஹாதேவா கோவிலில் நிகழ்ச்சி நிகழ்த்துகொன்டிருந்த போது, அவர் இறந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


89 வயதாகும் அவர் நாட்டியம் ஆடிக்கொன்டிருக்கையில் மேடையிலேயே சரிந்து விழுந்ததை அடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இவர் தனது மனைவி சாவித்ரி அம்மா, மகன் மது மற்றும் மகள்கள் மினி மற்றும் கங்கா ஆகியோருடன் வசித்துவந்தார்.


பத்ம பூஷண் உட்பட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா கமலாண்டமலையின் தேக்கண் களரி (கதகாளியின் தெற்கு பள்ளி) மற்றும் கலை கலாத்தியின் முக்கிய கலைஞராக இருந்தவர்.