ISRO முன்னாள் விஞ்ஞானி S நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரம் துணை நீதிமன்றத்தில் நம்பி நரியானன் தாக்கல் செய்த வழக்கைத் தீர்ப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(ISRO) முன்னாள் விஞ்ஞானி S நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது.


இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். கடந்த1994-ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடைசியாக 1998-ஆம் ஆண்டு இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது. 


சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் அதில் வெற்றி பெற்ற நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. 


கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாராயணன் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார். குறித்து இந்த கேரளா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு CBI விசாரணையின் போது விஞ்ஞானியின் தேவையற்ற கைத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிடப்பட்ட முன்னாள் DGP மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு காவல்துறை சூப்பிரண்டுகள் KK ஜோசுவா மற்றும் S விஜயன் ஆகியோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று கூறியது.


முன்னதாக 1998-ஆம் ஆண்டில், உளவு வழக்கில் விடுவிக்கப்பட்ட நாராயணன் மற்றும் பிறருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியது, அந்த தொகையை செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


நம்பி நாராயணன் பின்னர் NHRCயை அணுகினார், அவர் அனுபவித்த மன வேதனை மற்றும் சித்திரவதைக்கு மாநில அரசிடம் இழப்பீடு கோரியுள்ளார். இரு தரப்பினரையும் கேட்டபின், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு மார்ச் 2001-ல் NHRC ரூ.10 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.