திருவனந்தபுரம்: கேரளாவில் சிபிஐ(எம்) தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை 6 மணியளவில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கேரளா திருவனந்தபுரத்தின் காத்தான்கட பகுதியில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.


பாதிக்கப்பட்டவர் பெயர் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பைக்கில் இவர் சென்றுகொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் அவரை தாக்கியுள்ளனர்.


பாதிக்கப்பட்வர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த CCTV கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.