Oommen Chandy Passes Away: கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலமானார். அவருக்கு வயது 79. அவரின் இறப்பு செய்தியை அவரின் மகன் பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். "அப்பா காலமாகிவிட்டார்" என அந்த பதிவில் அவரது மகன் குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு முறை கேரள முதலமைச்சராக உம்மன் சாண்டி பதவி வகித்தார். உம்மன் சாண்டியின் மரணத்தை அடுத்து, இரண்டு நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பதாக கேரளா அரசு அறிவித்திருந்தது. இன்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உம்மன் சாண்டி மகனின் பேஸ்புக் பதிவு: