கொச்சி: தாயின் துயரத்தை போக்க மீன் விற்றதாக விமர்சிக்கப்பட்டு கேரள கல்லூரி மானவி ஹெனன், சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடப்புழாவின் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் பயின்று வரும் மானவி ஹெனன். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, இவர் மீன் விற்றதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் இவரை பிரபல படுத்தியது.



இந்நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திறும்பிய இவர் சாலை விபத்தில் சிக்கியதாகவும், விபத்தில் சிக்கிய இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கேரள மாநிலம் கொடங்கலூர் அருகாமையில் உள்ள கொத்தாபரம்பு என்னும் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விபத்து நடைப்பெற்ற இடத்தில் இருந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஹெனன், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக உள்ளார் என காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.