கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 45-க்கு மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். அதில் இன்று மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.


கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.


கனமழை காரணமாக கொச்சி முழுவதும் பல பகுதிகளில் நீர் தேங்கி உள்ளதால், கொச்சி சர்வதேச விமான நிலையம் இன்று பிற்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று விமான நிலைய நிர்வாகம் முன்பு அறிவித்திருந்தது. 


இந்நிலையில் தற்போது, கொச்சி விமான நிலைய சேவைகளை தற்காலிகமாக வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை அனைத்து விதமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. விமான பாதைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நாங்கள் நீரை வெளியேற்ற கடுமையாக உழைத்து வருகிறோம். அனைவருக்கும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம் என விமானம் நிர்வாகம் கூறியுள்ளது. 


தொடர்புக்கொள்ள அவசர கட்டுப்பாடு அறை எண்: 0484 3053500, 2610094.