சண்டிகர்: நாபா சிறையிலிருந்து காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவர் தப்பியோட்டம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள சிறையில் ஆயுதம் தாங்கிய 10 பேர்கள் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆயுதம் தாங்கிய குழு கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. ஆயுதம் தாங்கிய குழுவில் இருந்தவர்கள் போலீஸ் உடையில் இருந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகிள்ளது. 


ஹர்மிந்தருடன் மேலும் 4 தீவிரவாதிகள் குர்பிரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோ மற்றும் விக்ராம்ஜீத் சிங் ஆகிய கேங்ஸ்டார்களையும் அவர்கள் தப்பிக்கச் செய்தனர் என்று செய்திகள் வெளியாகிள்ளது. 


இவர்கள் சிறையில் இருந்து தப்பியதை அடுத்து பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.