கொல்கத்தா மாலில் ஒன்றில் வேட்டி அணிந்த வரை உள்ளே செல்ல அனுமதிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் உள்ளது குவெஸ்ட் மாலுக்கு வருபவர்கள் யாரும் வேட்டியோ அல்லது கைலியோ அணிந்து வரக்கூடாது என்பது விதிம்முறை. இந்த விதிமுறை மீறுபவர் மாலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும். இந்த நிலையில் ஒருவர் வேட்டி மற்றும் குர்தா அணிந்து அவரது நண்பருடன் குவெஸ்ட் மாலுக்கு சென்றுள்ளார்.


அங்கு வேட்டி அணிந்து இருந்ததால் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று பாதுகாவல் தெரிவித்துள்ளார். அப்போது வேட்டி அணிந்து வந்தவர் இங்கிலீஸ்ல உரையாடிய பிறகு அவருக்கு குவெஸ்ட் மாலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.