விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும் வரை வீடுதிரும்புவதில்லை என லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் அறிவிப்பு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாலுபிரசாத் மகன் தேஜ்பிரதாப்புக்கும் ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. மகள் ஐஷ்வர்யா ராயுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ஆனால் அதற்குள் கசப்புணர்வு தோன்ற விவாகரத்துக்கு மனு செய்யப்பட்டுள்ளது.


தான் ஒரு எளிமையான நபர் என்றும் தனக்கு நகரத்தில் வளர்ந்த பெண்ணான ஐஷ்வர்யா ராயுக்கும் விருப்பத்துக்கு மாறாக திருமணம் தன் மீது திணிக்கப்பட்டது என்றும் கசப்பான திருமண வாழ்வை தொடர முடியாது என்பதால் விவாகரத்துக்கு மனு செய்திருப்பதாகவும் தேஜ் பிரதாப் சமீபத்தில் தெரிவித்தார். 


இந்நிலையில், தற்போது அரித்துவாரில் உள்ள லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப், விவாகரத்து செய்யும் தனது முடிவைக் குடும்பத்தினர் ஆதரிக்கும்வரை வீடுதிரும்புவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 


லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திருமணமான ஆறே மாதத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் புத்தகயாவில் விடுதி அறையில் இருந்து வெளியேறிய பின் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.


ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து பாட்னாவில் உள்ள தொலைக்காட்சிக்குத் தொலைபேசியில் பேட்டியளித்த அவர், தனது விவாகரத்து முடிவைக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளும் வரை வீடு திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.