ஸ்ரீநகர்: காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஓமர் காலித்  கைது செய்யப்பட்டான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோபூர் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்ரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் ஈடுபட்டு வந்தனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நடந்து வரும் நிலையில் நேற்று சோபூர் என்ற இடத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒமர் காலித் கைது செய்யப்பட்டார். துஜ்ஜார் பகுதியை சேர்ந்த காலித்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஒமர் காலித்திடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.