புதுடெல்லி: டெல்லி அரசு தனது புதிய கலால் கொள்கையை 2021-22 சமீபத்தில் வெளியிட்டது. இந்த புதிய கொள்கையின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மது பிரியர்களுக்கு மிகுந்த நிம்மதியை கொடுத்துள்ளது. தலைநகரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகள் அதிகாலை 3 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய கொள்கை மூலம், நீண்ட வரிசை, கதையின் முன்னாள் கூட்டம் மற்றும் மதுபானக் கடைகளுக்கு வெளியே மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. புதிய கொள்கையின் கீழ், மதுபான கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி "வாக்-இன்" வசதி வழங்கப்படும்.


மது விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
டெல்லி அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கையின் கீழ், இப்போது வாடிக்கையாளர்கள் மதுகடைக்கு வெளியே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை மற்றும் நேரடியாக கவுண்டரில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபான பிராண்டை தேர்வு செய்ய முடியும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து மதுபானங்களையும் ரெஸ்டூரண்ட்ஸ், கிளப்புகளில் வைத்திருக்க வேண்டும்.


ALSO READ |  மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்


ரெஸ்டூரண்ட்ஸ், கிளப்புகளில் மதுபானம் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்க வேண்டும். மேலும் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் விளக்குகள் சரியாக இயங்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் இப்போது ஒவ்வொரு கடைக்கும் வெளியே நிறுவப்பட வேண்டும். ஒவ்வொரு ரெஸ்டூரண்ட்ஸ், கிளப்புகள் குறைந்தபட்சம் ஒரு மாதத்தின் வீடியோ பதிவை வைத்திருக்க வேண்டும்.


வருடாந்திர உரிமம் பெறலாம்:
தற்போது வரை, டெல்லியில் திருமண மண்டபம், பண்ணை வீடு, டான்ஸ் கிளப், விருந்து கிளப் போன்ற இடங்களில் விருந்து அல்லது எந்தவொரு நிகழ்வையும் ஏற்பாடு செய்யும் போது, அதன் உரிமையாளர்கள் மதுபானம் வழங்க தற்காலிக உரிமம் எடுக்க வேண்டியிருந்தது. 


இப்போது புதிய கொள்கையின் கீழ், புதிய எல் -38 உரிமங்களைப் பெற்ற வருடாந்திர கட்டணத்தை ஒரு முறை செலுத்திய பின்னர், வருடம் முழுவதும் தங்கள் திருமண மண்டபம், பண்ணை வீடு, டான்ஸ் கிளப் மற்றும் ஹோட்டலில் மது விருந்து அளிக்கலாம். 


அதேபோல ஒரு தடவை மட்டுமே தற்காலிக உரிமத்தைப் பெற விரும்பினால், அவர்கள் வெறும் ரூ .50,000 செலுத்தி பி -10 இ உரிமத்தைப் பெறலாம்.


ALSO READ |  குடிமகன்களுக்கு குஷியான செய்தி! மது அருந்துவதற்கான சட்டபூர்வ வயது வரம்பு குறைப்பு


அதிகாலை 3 மணி வரை மதுபானங்கள் கிடைக்கும்:
களை இது தவிர, டெல்லி மது பிரியர்களுக்கு மகிழ்சியான செய்தி என்னவென்றால், இப்போது டெல்லியில் உள்ள ஹோட்டல், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுக்கடைகளில் அதிகாலை 3 மணி வரை மதுபானங்களை வழங்க முடியும். புதிய கலால் கொள்கையின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR