நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் இந்தியா பதிலடி தாக்குதல், பாகிஸ்தான் அத்துமீறல் காரணமாக எல்லையில் போர் பதற்றம் நிலவியது.


இந்த பதற்ற நிலையால் தேர்தல் சரியான நேரத்தில் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.