2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் நாளை வெளியிடப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 


இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தத்துக்குமான அறிக்கையாக வெளியாக உள்ள இதில் பல மக்கள் வளர்ச்சி திட்டங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையானது நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நாட்டுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகளுக்கும் ஏழை எழிய மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையுமா என்று மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.