மார்ச் 1 முதல் லாட்டரிகளுக்கு 28% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரிவிக்கப்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில் அரசு நடத்தும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிகளுக்கு 28% ஒற்றை விகிதத்தை விதிக்க முடிவு செய்தது. லாட்டரிகளை வழங்குவதற்கான ஜிஎஸ்டி விகிதத்தை வருவாய் துறை அறிவித்தது மற்றும் அதன் முந்தைய மத்திய வரி (விகிதம்) அறிவிப்பை திருத்தியது.


தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தற்போது அரசு லாட்டரிகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.


இந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதி முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும். இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-


லாட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் திருத்தப்படுவது குறித்து மத்திய வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா 14 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட உள்ளது. மொத்தமாக லாட்டரி மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். இது வருகிற மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.