Maha Kumbh Mela Stampede Latest News Updates: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் நேற்று அதிகாலையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் எத்தனை பேர் படுகாயம் அடைந்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் போன்ற தகவல்கள் சரிவர தெரியவராமல் இருந்தது. எண்ணிக்கையில் கடும் குழப்பமும் நிலவியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நேற்றிரவு உத்தர பிரதேச போலீசார் கூட்ட நெரிசல் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அதில், மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 25 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  


மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: நடந்தது என்ன?


மகா கும்பமேளா விழாவில் பங்கேற்க தினமும் லட்சக்கணக்கில் மக்கள் பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், மவுனி அமாவாசை என்பதால் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட நேற்று அதிகாலை வழக்கத்தை விட அதிகமானோர் கூடினர்.


மேலும் படிக்க | Kumbh Mela | மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்! பலர் காயம்.. டஜன் கணக்கானவர்கள் மரணம்?


கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மக்கள் தகர்த்தெறிந்து நீராட சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மேளா மற்றும் அகாரா பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் வைக்கப்பட்டன என்றும் ஆனால் அவை கூட்ட நெரிசலால் பயனற்று போனதாக என்றும் மகா கும்பமேளாவின் துணை பொது ஆய்வாளரான (டிஐஜி) வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.


மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது என்ன?


திடீரென அங்கு மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதாகவும், அதில் பலரும் சிக்கி கீழே விழுந்ததாகவும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். கூட்டத்தை யாராலும் கட்டுப்படுத்தவே இயலவில்லை என்றும் கூறினர். 


மேலும், மக்கள் அப்படி வேகமாக தள்ளும்போது அங்கு செல்வது என்றே தெரியவில்லை என்றும் சிலர் கூறினர். மேலும், சம்பவத்தில் காயமடைந்த குழந்தையின் தாய் ஒருவர் மருத்துவமனையில் அளித்த பேட்டியில்,"சிலர் சிரித்துக்கொண்டே எங்களை அந்த கூட்டத்தில் தள்ளினர். நாங்கள் குழந்தைகள் இருக்கிறார்கள், தள்ள வேண்டாம் என அவர்களை நோக்கி கெஞ்சினோம்" என்றார். 


மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 25 லட்சம் நிவாரணம்


இந்த விவகாரம் நாடு முழுவதும் நேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில அரசு இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த குழுவில் நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜி) விகே குப்தா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விகே சிங் ஆகியோர் உள்ளனர். மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வார்கள். இது ஒருபுறம் இருக்க உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சத்தை உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.


இச்சம்பவம் குறித்து நேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,"மகா கும்பமேளாவில் இவ்வளவு பெரிய துயர சம்பவம் எப்படி நடந்தது என்பதை தெரிந்துகொள்ள, அனைத்து விஷயங்களையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது" என்றார். மேலும், இதுகுறித்து மேலும் விசாரிக்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நாளை (அதாவது இன்று - ஜன. 30) சம்பவ இடத்திற்கு விரைவார்கள் என்றார். 


மேலும் படிக்க | மகா கும்பமேளாவின் பேரழகியா இது.. ரசிகர்கள் அதிர்ச்சி! மோனாலிசாவின் Fake வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ