டெல்லி லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக் நாயக் பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைத்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து புகை மூட்டம் வெளியேறிய வண்ணம் உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.  அந்த வழியாக செல்லும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. 


மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.