ஒரிசா: கஜாம் பகுதியைச் சேர்ந்த 22-வயது இளைஞரை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசாவின் அஷ்கா பகுதியை சேரந்தவர் சாகர் சாவின். இவர் அப்பகுதியில் துரித உணவு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று இவர் ஏரியில் குளித்துவிட்டு வீடு திருபம்புகையில் மர்ம நபர் ஒருவர் இவரை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 


இச்சம்பவம் குறித்து அஷ்கா பகுதி காவல்துறை அதிகாரி சந்தோஷ் குமார் ஜீனா தெரிவிக்கையில்... கொலைசெய்யப்பட்ட சாகர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


எனினும் இதுவரை சரியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரினை காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணைக்கு பின்னரே முழு விவரங்களை அளிக்க இயலும் என தெரிவித்துள்ளார்.


மேலும் கைது செய்யப்பட்ட இருவரின் மீதும் வழக்கு தொடர்ப்பபட்டு வசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.