தொடர் கனமழை மழை காரணத்தால் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கடந்த சில தினங்களாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மணாலி-லே நெடுஞ்சாலையில் மார்ஹி என்ற இடத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.