மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்ல உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.


முன்னதாக நேற்று 2 வெடிகுண்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. பா.ஜ.க., வேட்பாளர் ஒருவரின் வீடு அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்று சிக்கியது. '


இந்நிலையில் பிரதமர் மணிப்பூர் வர உள்ளதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.