இளம்பெண்ணை வசியம் செய்வதற்காக, ஆந்தையினை கொடூரமாக கொலை செய்த 40-வயது ஆண் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி சுல்தான்பூர் பகுதியினை சேர்ந்தவர் கான்யா; வயது 40. திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். இவர் வசித்து வரும் சுல்தால்பூரியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் மீது இவருக்கு எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அவரை வசியம் செய்வதற்காக பில்லி சூனியத்தினை நாடியுள்ளார். அந்த வகையில் ஆந்தை ஒன்றினை பிடித்து கொடூரமாக பலி கொடுத்துள்ளார்.


இந்த விவகாரம் குறித்து விவரம் அறிந்த விலங்கு நல வாரியம் அலுவளர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கான்யா கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து காவல்துறை ஆணையர் சச்வந்தர் சிங் தெரிவிக்கையில்... கைது செய்யபட்ட கான்யா விசாரணையின் போது ஆந்தையினை வைத்து எவ்வாறு பெண்களை வசியம் செய்வது என Youtube வீடியோ உதவியோடு விளக்கியுள்ளார். மேலும் எந்த நேரத்தில் எவ்வாறு பூஜை செய்யவேண்டும் என்பதினையும் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த வீடியோவினை பார்த்தே தனக்கு பிடித்த பெண்ணை வசியம் செய்ய கான்யா முயன்றதாக தெரிகிறது.


சடலமாக மீட்கப்பட்ட ஆந்தையின் பிரேதத்தினை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில்... முதற்கட்டமாக ஆந்தையின் சிறகுகளை வெட்டி எறிந்த கான்யா, பின்னர் ஆந்தையின் உடல் பகுதியில் பல முறை ஊசியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளளார். ஆந்தையின் மார்பு பகுதி, நுரையீரல் பகுதி என ஒவ்வொரு பகுதியினையும் ஊசியை வைத்து தாக்கியுள்ளார்.


தொடர்ந்து தகவல் அளித்த கால்துறை ஆணையர்., கான்யாவிற்கு எப்படி ஆந்தை கிடைத்தது எனவும், அவருக்கு ஆந்தையினை வழங்கிய நபரினையும் கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.