பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பாலியல் தொழிலாளியை விட மோசமாக நடந்து கொள்கிறார் என உ.பி. மாநில பா.ஜ துணைத் தலைவர் தயா சங்கர் சிங், கூறினார். இதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். ராஜ்யசபாவில் நிதியமைச்சர் ஜெட்லி மன்னிப்பு கோரியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


அதனைத்தொடர்ந்து, தயா சங்கர் சிங் பா.ஜ-விலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் லக்னோவின் ஹஸ்ரட்கன்ஜ் நகரில் திரண்ட பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தயா சங்கர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.