சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக MP பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை காரண அறிவிப்புகளை (show cause notices) வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் போது, ​​நிதியமைச்சர் தாக்கூர் மற்றும் மேற்கு டெல்லி எம்.பி. வர்மா ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட “ஆத்திரமூட்டும்” மொழி குறித்து டெல்லி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்தது.


திங்களன்று டெல்லியின் ரிதாலாவில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில், பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியது, துரோகிகள் சுட்டுக் கொல்லுங்கள் என்ற கருத்தை வெளியிட்டது என இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து தேர்தல் ஆணையம் இருவர்களிடம் இருந்து காரண அறிவிப்புகளை கோரியுள்ளது.


இதுதொடர்பான தாகூரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 


பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா செவ்வாயன்று ஷாஹீன் பாகின் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களின் போது லட்சக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டினார் என கூறப்படும் நிலையில், இது டெல்லி தேர்தல் தலைவர் தனது கருத்துக்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பித்ததால் எதிர்ப்பின் சீற்றத்தைத் தூண்டியது.


தேசிய தலைநகரில் ஷாஹீன் பாக் போராட்டங்கள் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான தனது கட்சியின் தாக்குதலை பாஜக சட்டமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா வியாழக்கிழமை மீண்டும் வெளிப்படத்திய நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.