நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் துவங்கியது. முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பாரிக்கர், பா.ஜ., தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி., குலாம் நபி ஆசாத், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.