நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 


இந்நிலையில் பிரதமர் மோடியும் மக்கள் ஆதரவை பெற இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன் முதற்கட்டமாக மோடி முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார். 


கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார். அதுபோல், இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.