மும்பை: மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராட்டிய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. 


ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய பேரரசு விரிவடைய வித்திட்டவர்.


மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ உள்ளது. 


இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும் உயரமானதாக நிறுவப்பட இருக்கிறது. 


சத்ரபதி சிவாஜியின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டு இருந்தது. பாஜகாவினர் தலைப்பாகை அணிந்து மோட்டார்சைக்கிளில் அலங்கார ஊர்திக்கு பின்னால் பேரணியாக வந்தனர். பாஜகாவை சேர்ந்த மாநில மந்திரிகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


ஊர்வலம் கிழக்கு விரைவு சாலையில் சயான், மாட்டுங்கா, தாதர், பரேல், லால்பாக், பைகுல்லா, சி.எஸ்.டி. வழியாக கேட்வே ஆப் இந்தியாவை சென்றடைந்தது. சயானில் ஊர்வலம் நடந்த போது பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் மலர்களை தூவி ஊர்வலத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிலையில் சத்ரபதி சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையில் ரூ.3600 கோடியில் சிலை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது புனித நீரை தெளித்தும், மண்ணை தூவியும் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 


இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ்,சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்கிறார்கள்.