ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காயம் அடைந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு யசோதா பென் குஜராத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 



— ANI (@ANI) February 7, 2018


இதில் யசோதா பென்னிற்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் யசோத பென் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார்.


 


பிரதமர் நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்பது குறிபிடத்தக்கது.