புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் 27-வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி பதவி ஏற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள பிபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.


இந்நிலையில், தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்படுவதை தவிரிக்க முடியாது என்று புதிய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.


இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் பாகிஸ்தானுக்கு அனுப்பும் செய்தி ஆகும். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.