இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான மதர் டைரி பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதர் டைரி பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இன்று விலை உயர்வை குறித்து அறிவிப்பை அறிவித்தார். பாலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.


அதாவது தற்போது ஒரு பாக்கெட் (500 மி.லி) ரூ. 2 ஆக உயர்ந்து விட்டது. மேலும் 1 மி.லி ரூ. 1 ஆக உயர்ந்து விட்டது. 


தற்போது நிலவி வரும் கோடைகால வெப்ப நிலையால் பால் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். முன்னதாக கடந்த மே 21ம் தேதி அமூல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.