டெல்லி: டெல்லியில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் தாய் ஒருவர் தனது 2.5 வயது கைக்குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சோனு குப்தா, டெல்லி பிரகலாத் பூர் ஒரு குடியுருப்பில் தனது மாமியார் சண்டையிட போது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த செயலை செய்துள்ளார்.


அந்த இளம் தாய் வீட்டின் கட்டிலில் அமர்ந்து ஆண் ஒருவருடன் தகராறு செய்து வருகிறார். அப்போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் தனது குழந்தையை தூக்கிச் சென்று வீட்டின் கதவருகில் நின்று கொண்டு மாடிப்படியில் வேகமாக வீசியெறிகிறார். 


இந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த குழந்தை உடனடியாக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.