மும்பையை சேர்ந்த இளைஞர் தனது பிறந்தநாளை பூங்காவில் கொண்டாடும் போது தனது நண்பர்களால் கொல்லப்பட்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையைச் சேர்ந்த சாவந்த் தனது 32 வது பிறந்தநாளை கட்கோபரின் பந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். நிதேஷ் சாவந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது தனது சொந்த நண்பர்களால் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து அப்பகுதி காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஒரு வாரத்திற்கு முன்பு சாவந்த் மற்றும் அவரது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இவரின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இறந்தவனுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது பிறந்தநாளில் அவரைத் தாக்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை கட்கோபர் பந்த் நகரரில் உள்ள பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, சாவந்தின் நண்பர்கள் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். 


இது குறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு மூன்று நபர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்கோபர் பகுதியில் ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது கொலை வழக்கு இதுவாகும்.


இது குறித்து ANI செய்திநிருவனத்திடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாப் போஸ்லே கூறுகையில்; இந்த கொலை சம்பவத்தில் ஏழு எட்டு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.