மும்பை: மும்பை நகரில் டிரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு டிரோன் ஒன்று பறந்ததை கண்டதாக விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை நகரம் முழுவதும் அலெர்ட் செய்யபட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் டேராடூனில் இருந்து வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது அதன் விமானி ஆஷிஷ் ராஜன் , மும்பை குர்லா பகுதியில் புளூ மற்றும் பிங்க் நிறம் கொண்ட டிரோன் ஒன்று பறப்பதை கண்டுள்ளார். உடனடியாக ஆஷிஷ் ராஜன் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். 


இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும் போது ஆளில்லா விமானத்தை செயல்படுத்தியவர்கள் குறித்து குறிப்பிட்டப்பட்டுள்ள பகுதியில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.